குறித்திட்டேன் குளிகனுமோ ரேழில்நிற்கக் கொற்றவனே குடும் பிக்குக் கண்டம்சொல்லு சிரித்திட்டேன் சென்மனுக்கு விவாதத்தாலே சிவசிவா செம்பொன்னும் நஷ்டமாகும். அரித்திட்டேன் அட்டமத்தில் குளிகன்நிற்க அப்பனே அழும்பனடா ஜலத்தால் கண்டம் முரித்திட்டேன் போகருட கடாக்ஷத்தாலே முகரோக முண்டென்று மூட்டுவாயே. -விளக்க உரை- மேலும் ஒரு கருத்தைக் குறித்துச் சொல்வேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகனுக்குக் கண்டம் நேரும். இவனுக்கு விவாதத்தாலே வெகுதன விரயம் சிவனருளாலே சித்திக்கும். அதே போல் எட்டாமிடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகன் மகா அழும்பன் என்பதோடு நீரால் கண்டம் ஏற்படும் என்பதையும், அறிவித்துக் கொள்ளலாம். என் குருவான போகருடைய கருணையாலே புலிப்பாணியாகிய நான் கூறும் இன்னொன்றையும் நீ அறிந்து கொள்க. இச்சாதகன் முகரோகன் என்பதையும் நீ உணர்த்துவாயாக.
Sonntag, 9. September 2012
Pulippani-குளிகன் 7
குறித்திட்டேன் குளிகனுமோ ரேழில்நிற்கக் கொற்றவனே குடும் பிக்குக் கண்டம்சொல்லு சிரித்திட்டேன் சென்மனுக்கு விவாதத்தாலே சிவசிவா செம்பொன்னும் நஷ்டமாகும். அரித்திட்டேன் அட்டமத்தில் குளிகன்நிற்க அப்பனே அழும்பனடா ஜலத்தால் கண்டம் முரித்திட்டேன் போகருட கடாக்ஷத்தாலே முகரோக முண்டென்று மூட்டுவாயே. -விளக்க உரை- மேலும் ஒரு கருத்தைக் குறித்துச் சொல்வேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகனுக்குக் கண்டம் நேரும். இவனுக்கு விவாதத்தாலே வெகுதன விரயம் சிவனருளாலே சித்திக்கும். அதே போல் எட்டாமிடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகன் மகா அழும்பன் என்பதோடு நீரால் கண்டம் ஏற்படும் என்பதையும், அறிவித்துக் கொள்ளலாம். என் குருவான போகருடைய கருணையாலே புலிப்பாணியாகிய நான் கூறும் இன்னொன்றையும் நீ அறிந்து கொள்க. இச்சாதகன் முகரோகன் என்பதையும் நீ உணர்த்துவாயாக.
Keine Kommentare:
Kommentar veröffentlichen