சூடப்பா சந்திரனார் மூன்றேழ்ஐந்து சுத்த இந்து பன்னொன்றில் தனித்திருக்க மாடப்பா மந்திரங்கள் செய்வன் காளை மகத்தான வாதமொடு வயித்தியம் செய்வான் கூடப்பா குடும்பமது விருத்தியாகும் குவலயத்தின் எதிரிக்கு மார்பிலாணி வீடப்பா போகருட கடக்ஷத்தாலே விதியறிந்து புவியோர்க்கு விளம்புவாயே. -விளக்க உரை- எல்லாராலும் போற்றப்படும் சந்திரபகவான் 3,7,5,11 ஆகிய இடங்களில் தனித்திருக்க, அச்சாதகன் செல்வமுள்ளோன் என்றும் மந்திரங்கள் அறிந்து முறைப்படி பிரயோகித்து வெற்றி காண்பவன் என்றும் வாதம் செய்வதில் வல்லவன் என்றும் வயித்திய சாத்திரத்தில் சிறந்தோன் என்றும் அவனது குடும்பமானது என்றும் விருத்தியடையும் அவனது எதிரிகள் அழிவர் என்றும் எனது சற்குருவான போகரது கருணையாலே புலிப்பாணி அருளியதை புவியோர்க்கு உணர்த்துவாயாக.
Keine Kommentare:
Kommentar veröffentlichen