Mittwoch, 3. Oktober 2012

8th Lord in 3rd place

அரைந்திட்டேன் இன்னமொன்று அன்பாய்க்கேளு அட்டமத்தோன் மூன்றினிலேயமர்ந்தவாறும் கரந்திட்டேன் கருவூரி லிருந்துவந்த காளையன் நூறாண்டு வசிப்பனப்பா பரைந்திட்டேன் பகைவர்களு மெதிர்த்தாரானால் பாலனுமே போர்புரிவன் நிதியுள்ளோன் கிரந்திட்டேன் போகருட கடாட்சத்தாலே சிறப்பான புலிப்பாணி சொன்னேன்பாரே. இன்னொரு விஷயத்தையும் நான் அன்புடனே கூறுகிறேன். அதனையும் நன்கு உணர்ந்து கேட்பாயாக. இலக்கினத்திற்கு எட்டுக்குடையவன் மூன்றாம் இடத்தில் அமர அவனுக்கு ஆயுள் நூறு என்க. இனி அவனுக்குப் பகைவர் ஏற்படின் அவன் அச்சமற்றவனாக வீரப்போர் புரிபவனாவான். மேலும் இவன் நிறைதனம் உடைய இரு நிதிக் கிழவனேயாவான். சற்குருவான போக மகா முனிவரின் அருளாசிபெற்ற புலிப்பாணி இதனை உனக்குச் சொன்னேன்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen