ஆரப்பா அஞ்சுக்கு அஞ்சாம் வீட்டில் அப்பனே அசுபர்களும் அமர்ந்துநிற்க பாரப்பா பிதுருக்கு கண்டம் தெண்டம் பலமாக செப்புவாய் அரசர்தோஷம் சீரப்பா சுபர் நிற்க செல்வமுண்டு சிவசிவா பிதுருக்கு விதியும் தீர்க்கம் கூறப்பா குடிநாதன் கேந்திரகோணம் கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே வேறொன்றையும் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு ஐந்துக்கு ஐந்தாம் வீட்டில் அதாவது ஒன்பதாம் இடத்தில் தீக்கோள்கள் அமர்ந்து நிற்க பிதுர்களுக்குக் கண்டமும் அதனால் பொருள் விரயமும் மிகுதியாக ஏற்படும். அரசர் முதலியோராலும் தோஷமே ஏற்படும். ஆனால் சுபர் நிற்பாரேயானால் செல்வமுண்டாகும். சிவபரம்பொருளின் பேரட் கருணையால் பிதுர்களுக்கு ஆயுளும் தீர்க்கமாகும். இலக்கினாதிபதி கேந்திர, திரிகோண ஸ்தானத்திலிருப்பினும் இதே பலன் என்பதையும் போகரருளாலே புலிப்பாணி கூறினேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen