Sonntag, 4. Mai 2014

Moon, 12th-5th House in one place

செப்புவாய் சந்திரனும் ஈராறோனும் சிவசிவா பஞ்சமத்தோன் மூவர்சேர்ந்து அப்புவாய் ஆகாசங் கோபுரத்தில் அப்பனே கம்பத்தைக் கட்டித்தானும் ஒப்புவாய் உலகத்தோர் மதிமயங்க ஓகோகோ ஆகாச கரணம்போட்டு தப்புவாய் தரணி தனில் கீழேவந்து தார்வேந்தர் மனமகிழ பணிவன்பாரே. புகழ் பெற்ற சந்திரனும் இலக்கினத்திற்குப் ப்ன்னிரண்டுக் குடையவனும் சிவ பரம்பொருளின் பேரருட் கருணையினால் ஐந்தாமிடத்தோனும் ஆகிய இவர்கள் மூவரும் சேர்ந்து நிற்க. இச்சாதகன்,நீர் மீதும், ஆகாச மீதும், கோபுரத்தின் மீதும் கம்பங்களை நாட்டி அதன் மீதிலும் உலகோர் ஒப்பும்படியாக, அவர்களது மதியானது மயக்கமுறும்படியாக ஆகாசத்தில் கரணம் இட்டு வேடிக்கை காட்டி பூமியின் கீழ்வந்து மன்னர் முதலான மற்றையோரின் பரிசில்களைப் பெற்று மகிழ்வான் என்று போகமாமுனிவரது பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen