Sonntag, 4. Mai 2014

சூரியனுக்குப் பின்னால் சனிபகவான் நின்றால் Saturn before Sun

அரைந்திட்டே னின்னமொன்று செப்பக்கேளு
அனலனுக்குப் பின்னாலே அலரிமந்தன்
பரிரைந்திட்டேன் பண்டுபொருள் அகமிங்கிட்டும்
பார்தனிலேபர தார விசையநப்பா குரைத்திட்டேன் குமரனுக்கு எட்டுபத்தில் குலவையிட்டு வருவனடா சண்டன்தானும் சிறந்திட்டேன் ஜென்மனுக்கு யோவஞ்செப்பு சிறப்பாகப் புலிப்பாணி ஆசிச்சேனே.


 இன்னொரு விவரத்தையும் உனக்குக் கூறுகிறேன். அதை மனங்கொண்டு கேட்பாயாக! அனலன் என்று சொல்லப்படும் சூரியனுக்குப் பின்னால் தாமரையை மலர்த்தும் அவனது குமாரனான மந்தன் என அழைக்கப்படும் சனிபகவான் நின்றால் அச்சாதகனுக்கு பூர்வீக சொத்தும் நல்ல மனையும் கிடைக்கும். அவன் இந்நிலவுகில் பரதார இச்சை கொண்டவனாக இருப்பான் என்றும் அவனது எண்பதாவது வயதில் எமதூதனாகிய சண்டன் வருவானென்றும் ஆயினும் அவன் யோகவானேயென்றும் போகர் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen