Donnerstag, 19. Juni 2014

Mars in 2nd House

பாடினே னின்னமொரு புதுமைகேளு பலமான செவ்வாயும் துதியில் நிற்க கூடினேன் கிரகத்தில் வழக்கும் போரும் குமரியவள் கணவனையும் கருதிப்பாராள் தேடினேன் தையலுமோ மாண்டாளானால் தனம்விரயம் சஞ்சலமும் அழுதுமாய்வன் ஆடினேன் ஆடவர்கள் அழுதகூலி அவல்கடலை அவர்மடியில் போடுவாரே. நான் கூறுகின்ற இன்னொரு புதுமையும், நீ கேட்பாயாக! ஸ்தான பலமிக்க செவ்வாய் இரண்டாம் இடத்தில் நிற்க அச்சாதகனின் மனையில் அனுதினமும் போர் நிகழும். காரணம் மனைவி அவனைக் கருதிப் பாராதவளாக இருப்பாள். ஆயினும் அவள் மடிந்தாளேயானால் தனம் விரயமாதலும், மனோ வியாகூலமும், அடைந்து அழுகையினால் அச்சாதகன் மாய்வான் என்றே கூறுவேன். ஆடவர்கள் அழுத கூலிக்காக அவலையும் கடலையையும் அவர்தம் மடியில் போடுவார் என்று போகர் அருளாணைப்படி புலிப்பாணி கூறினேன்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen