Montag, 27. August 2012

05 ஐந்தாம் வீடு


பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:
5ஆம் வீடு இரைப்பை, கணையம் (Stomach,Liver )
குழந்தை. பாட்டன். வம்சா வழி அத்துனையும். பாட்டிகள். பூர்வ புண்யம். மனம். எண்ணம். காதல். சந்தோஷம். அதிர்ஷ்டம். யோகம். போட்டி. இஷ்ட தெய்வம். சிற்றின்பம். மந்திர உச்சாடனம். உபாசனை (இஷ்ட தெய்வம்) கற்பழிப்பு. வழிபாடு. திருவிழாக் கோலங்கள். மன திருப்தி. ஸ்டாக் எக்சேஞ்ச் சூதாட்டம்,
1. ஐந்தாம் வீடு மூன்று பலன்களைத் தருவது. அவை முறையே பூரவ புண்ணியம், குழந்தைபாக்கியம், நுண்ணறிவு!
2. பூர்வபுண்ணியம் என்பது முன் பிறவியில் நாம் செய்த நன்மைதீமை களின்படி நமக்குக் காலன் கொடுக்கும் சான்றிதழ். அந்த சான்றிதழை வைத்துத்தான் இந்தப் பிறவியில் பல செயல்கள் நமக்கு நன்மை உள்ளதாக அமையும்!
3. நிறைய ஜோதிடர்கள் இங்கேதான் சறுக்கிவிடுவார்கள். பூர்வ ஜென் மத்தை முழுமையாக அறிந்து சொல்ல எந்தக் கொம்பனாலும் முடியாது. ஓரளவிற்குச் சொல்லலாம்!
4 இந்த 5ஆம் வீட்டிற்குக் காரகன் (authority) குரு. அவர் அந்த 5ஆம் வீட்டிற்கு ஐந்தில் அதாவது லக்கினத்தில் இருந்து 9ல் இருந்தால் ஜாதகன் மிகவும் அதிஷ்டசாலி! புண்ணிய ஆத்மா! பெயரையும், புகழையும் அவர் (காரகன் குரு) பெற்றுத்தருவார்.
5 1ஆம் வீடு லக்கினம், 5 ஆம் வீடு அவனுடைய குழந்தை. 9ஆம் வீடு அவனுடைய (ஜாதகனுடைய) தந்தை. அந்த 9ஆம் வீட்டிலிருந்து 5ஆம் வீடு மீண்டும் ஜாதகனின் வீடாகவே இருக்கும். அதாவது 9ஆம் வீட்டுக் காரரின் மகன். ஒரு சுழற்சி!! என்ன அற்புதம் பாருங்கள்!
6. ஐந்தாம் வீடு எண்ணங்களையும், உணர்வுகளையும் குறிப்பதாகவும் இருக்கும். ஐந்தாம் வீடு நல்ல அமைப்புக்களைப் பெற வில்லை என்றால் ஜாதகன் வில்லங்கப் பார்ட்டி அல்லது டென்சன் பார்ட்டி!
7. ஐந்தாம் வீட்டைப் பற்றி அறிந்து கொள்ள முதலில் பார்க்க வேண்டிய மூன்று. ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி மற்றும் காரகன் குரு. அவைகள் நன்றாக இருந்தால் நல்லது. காரகனும், அதிபதியும் கேந்திர, கோணங்களிலோ அல்லது சுயவர்க்கத்தில் நல்ல பரல்களுடனோ இருத்தல் நலம்.

8. அடுத்து உபரியாகப் பார்க்க வேண்டியது. 5 ஆம் வீட்டில் வந்து இடம் பிடித்து அமர்ந்திருக்கும் கிரகம், ஐந்தாம் வீட்டு அதிபதியோடு சேர்ந் திருக்கும் கிரகம், அல்லது காரகனோடு சேர்ந்திருக்கும் கிரகம். அவை களும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையே!

9. மேஷம், சிம்மம், தனுசு ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம் வீடாக அமையப் பெற்றால் அவர் இயற்கையாகவே நேர்மையான வராக இருப் பார். அவரை யாரும் சுலபமாக விலைக்கு வாங்க முடியாது ஜாதகத்தில் லக்கினதிபதி போன்றவர்கள் கெட்டிருந்தால் மட்டுமே அவர் நேர்மை தவற நேரிடும். இல்லையென்றால் இல்லை!
10. அவர்களுடைய இந்த நேர்மை, சிலரை எரிச்சல் படுத்தவும் செய்யும். ஆனால் அவர்கள் அதைப்பற்றி சிறிதும் சட்டை செய்யாத அளவிற்கு மன உறுதியுடன் இருப்பார்கள். ஐந்தாம் வீடு மனதிற்கும் உரிய வீடுதான் மனம், நெஞ்சம், இதயம் என்று எப்படி வேண்டுமென்றாலும் பொருள் கொள்ளுங்கள்!
11. ஐந்தில் ராகு அல்லது கேது அல்லது சனி ஆகிய கிரகங்களில் ஒன்றி ருந்தாலும் ஜாதகன் எப்போதுமே எதற்காவது கவலைப் பட்டுக் கொண்டிருப்பான்.
12. ரிஷபம், கன்னி, மகரம். ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம் வீடாக அமையப் பெற்றால் அவர் கற்பனைத் திறன் (imagination), ஆழ்ந்த உணர்வுகள் (deep feelings) அதீத நினைவாற்றல் (memory) உள்ளவராக இருப்பார். இது பொது விதி. ஜாதகத்தின் வேறு கிரக சேட்டைகளை வைத்து இது மாறுபடும்
13. ரிஷப ராசி ஐந்தாம் வீடாக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கையை சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள். (The person will be highly optimistic and he takes life easy) காரணம் ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன். அதனால் எப்போதுமே ஜாலி.

14. மகர ராசியை ஐந்தாம் வீடாகப் பெற்றவர்கள் பொதுவாக டென்சனா கும் ஆசாமிகள் Highly pessimistic and takes life seriously கரணம் அதிபதி சனி!
15. கன்னி ராசியை ஐந்தாம் வீட்டாகப் பெற்றவர்களுக்கு ரிஷபம் மற்றும் மகர ராசிகளின் பலன்கள் கலவையாக இருக்கும். காரணம் அதிபதி புதன் அவர்கள் எப்போது ஜாலியாக இருப்பார்கள், எப்போது சீரியசாகி விடு வார்கள் என்பது அவர்களுக்கு அன்றாடம் அமையும் சூழ்நிலை களைப்பொறுத்து மாறுபடும்!
16. மிதுனம், துலாம், கும்ப ராசிகளை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்கள் அடுத்த பிரிவினர். They will have different emotional set up. They are concerned with conduct rather than motive. They are concerned with action rather than thought or feeling. செயல் வீரர்கள். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் காரியங்களைச் செய்பவர்கள்.

17. துலா ராசியை ஐந்தாம் வீடாகக் கொண்டவர்கள் யாதார்த்தமானவர் கள். More practical people!
18. கும்பராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள். உண்மையான மனதுடையவர்கள். நம்பகத்தன்மை மிக்கவர்கள் (அவர்களை முழுதாக நம்பலாம்.
19. மிதுன ராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள் தங்கமானவர்கள் அந்த ராசிக்காரக்களின் நட்பு கிடைத்தால் பெட்டியில் வைத்துப் பூட்டிவிடுங்கள்! இன்னும் சொல்ல துறு துறுக்கிறது. பதிவைச் சமர்ப்பணமாகப்பெற்றுக் கொண்டவர் சண்டைக்கு வந்தால் என்ன செய்வது?.ஆகவே விளக்கம்/ கதை இல்லை!
20. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்கொண்டவர்கள், அதிகமான தொல்லைகளுக்கு ஆளாவர்கள். ஆனால் அவற்றைப் பொறுமையுடனும், மன் உறுதியுடனும் தீர்க்ககூடிய வல்லமை பெற்றிருப்பார்கள்.
21. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்கொண்டவர்கள் தத்துவஞானிகளாக இருப்பார்கள். உலகின் மிகப் பரபலமான Philosopherகள் எல்லாம் இந்த அமைப்பை உடையவர்களாகவே இருப்பார்கள். இயற்கையாகவே இந்த அமைப்பைக் கொண்டவர்கள் தர்ம, நியாயங்கள் தெரிந்தவர்களாக இருப்பார்கள். யாரும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!
22. கடகம், விருச்சிகம்,மீனம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்கொண்டவர்களைப் பற்றி இப்போது பார்ப்போம். இவர்கள் வித்தியசமானபார்வை கொண்டவர்கள். மற்றவர்களை விட இவர்கள் ஒன்றைப் பார்த்துஎடுக்கும் முடிவு. அற்புதமாக இருக்கும். அதுதான் சிறந்ததாகவும்இருக்கும்
23. இந்த அமைப்பினர் தலைமை ஏற்கத்தகுதியுடையவர்கள். அந்தமூன்றில் (கடகம், விருச்சிகம்,மீனம்) கடகம் மிகவும் சிறப்பானது. காரணம் அதிபதி சந்திரன்.
24. மீனத்தை ஐந்தாம் வீடாகக் கொண்டவர்கள், ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் செயலை உடையவர்கள். அவர்களுடைய மன ஒட்டத்தை யாராலும்ஊகிக்க முடியாது.



25. ஜாதகத்தில் லக்கினம், ஒன்பதாம் வீடு ஆகியவ்ற்றிற்கு நிகராக 5ஆம் வீடும் அதி முக்கியமானது. அத்னால அவை மூன்றிற்கும் திரிகோணம்எனப்படும் முதல் நிலை அந்தஸ்து (status) கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 5 வது இடத்தை புத்திரஸ்தானம் என்று கூறுவர் . பொதுவாக இந்த இடத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அவரவர் ஜெனன ஜாதகத்தின் கிரக நிலைகள் பொறுத்து , அதன் திசை அல்லது புத்தி வரும் கால நேரம் பொறுத்து தோஷத்தை ஏற்படுத்தும் .இந்த 5 ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் தந்தைக்கு தோஷத்தையும் , சந்திரன் இருந்தால் தாய்க்கு தோஷத்தையும் , சனி இருந்தால் தனது குழந்தைகளுக்கும் , புதனிருந்தால் தாய் வர்கத்தினருக்கும் , குருவிருந்தால் தந்தை வர்கத்தினருக்கும் , ராகு இருந்தால் பிள்ளைகளுக்கும் , செவ்வாய் இருந்தால் தாய்மாமனுக்கும் தோஷம் உண்டாகும் .
புத்திரர்கள் உண்டாகுதலும் குரு கிரகமும்
குரு கிரகம் ஐந்தாம் இடமாகிய புத்திர ஸ்தானத்தில் இருந்தால் புத்திரர்கள் உண்டாக தடைகளை உண்டு பண்ணும் .ஆனால் மீனா லக்கினத்திற்கு மட்டும் ஐந்தாம் இடத்தில் குரு உச்சமாக இருந்தால் இந்த தடை வெகு காலத்திற்கு நீடிக்காது. ஆனாலும் ஆண் பிள்ளைகள் உண்டாவதிர்க்கு பதிலாக பெண் பிள்ளைகளே அதிகம் உண்டாக்கும்.
ஐந்தாம் அதிபதி 9ஆம் வீட்டில்
9ல் இருந்தால்: If favourably disposed: கோவில், குளம் என்று திருப்பணிகள் செயக்கூடியவர். சொற்பொழிவாளர், பெரிய கவிஞர் அல்லது எழுத்தாளர், பேராசான். If not favourably disposed: அதிர்ஷ்டமில்லாதவர். முயற்சிகள் எல்லாம் தட்டிக்கொண்டு போய்விடும். நடக்காது போய்விடும்

பொதுவிதி. தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள கிரகஅமைப்புக்களை வைத்து இந்தப் பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம் கிரக சேர்க்கைகள், மற்றும் கிரக பார்வைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும்

கேது: குழந்தைகள் இழப்பு.(வயதில் எந்த வயதில் வேண்டுமென்றாலும்) வயிற்று உபாதைகள் உடையவர். வித்தியாசமான உணர்வு (உணர்ச்சி) அனுபவங்கள் ஏற்படக்கூடியவர். வயதான காலத்தில் ஆன்மீகம், வேதங்களில் ஈடுபாடு உண்டாகும். வயதான காலத்தில் துறவுச் சிந்தனை மேலோங்கி வரும். சிலர் ஆசிரமங்களில் போய்ச் சேர்ந்துவிடுவார்கள்
சந்திரன்:    தெளிவான மனதை உடையவர். அறிவு ஜீவி,(highly intelligent) குழந்தைகளால் இன்பம், இடம் சொத்துக்களின் சேர்க்கை, படித்தவர், உண்மையானவர் என்ற நிலைப்பாட்டை உண்டாக்கும். மிகுந்த இறை நம்பிக்கை உள்ளவர். இவருடைய குழந்தைகளின் ஒன்று மிகவும் புகழ் பெற்று, வயதானகாலத்தில் இவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்
சனி: குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்கக்கூடியவர். அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் மாறி மாறி ஏற்படும். நண்பர்களிடமும், உறவினர்களிடமும் வாதிட்டு சண்டையிடக் கூடியவர் குடும்ப வாழக்கையில் துயரங்கள் நிறைந்தவர். பாவ சிந்தனைகள் உடையவர். மூடர், வறியவர், மற்றவர்களால் வெறுக்கப்படக்கூடியவர் (Evil minded and Stupid. sickly and week, poor and hated by others) இந்த குணங்களில் எல்லாக் குணமும் இருக்கலாம். அல்லது ஜாதகத்தின் வேறு அமைப்பை வைத்து சிலது மட்டும் இருக்கலாம்.
சுக்கிரன்; கவிஞர். உள்ளத்தில், சிலர் எழுத்தில். செல்வம் சேரக்கூடியவர். அழகான குழந்தைகளை உடையவர். எப்போதும் மகிழ்ச்சியை உடையவர். அரசமரியாதை கிடைக்கக்கூடியவர் அதிகமாகப் பெண் குழந்தைகளை உடையவர். பங்குவணிகம், ஊகவணிகங்களில் வெற்றி பெறக்கூடியவர்.
சூரியன்: குழந்தைப் பேறைக்குறைக்கும். மகிழ்ச்சியைக் குறைக்கும். இதய நோய்களை உண்டாக்கும். குழந்தைகள் பிறந்தாலும் அவர்களிடமிருந்து பிரிவை உண்டாக்கும் காடுகளிலும், மலைகளிலும் சுற்றித்திரிய வைக்கும். மொத்தத்தில் பார்வை, ஐந்தாம் வீட்டு அதிபதி சென்று அமர்ந்த இடம் போன்ற வேறு நல்ல அமைப்புக்கள் இந்த வீட்டிற்கு இல்லாதபோது, சூரியனின் அமர்வு நல்லதல்ல!
 செவ்வாய்:மனைவிக்கு துயரங்கள் ஏற்படும். மனைவிக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் அது ஏற்படும்.தொல்லை தரும் சிந்தனைகளை உடையவர், மகிழ்ச்சி இல்லாதவர், அதிரடியானவர், பலகீனமான மனதுடையவர். தன்னுடைய குழந்தைகளால் துரதிர்ஷ்டங்களைச் சந்திக்க உள்ளவர். "அந்த" விஷயத்தில் மிகவும் ஆர்வமுடையவர் "அந்த" விஷயத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இது பெண்ணின் ஜாதகம் என்றால் குழந்தை பிறப்பில் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.
புதன்:மிகவும் படித்தவர், கல்வியாளர், மகிழ்ச்சி நிரம்பியவர். அதிகக் குழந்தை களை உடையவர். அரசு ஆலோசகராக அல்லது நிறுவனங்களில் ஆலோசகராக இருக்கக் கூடியவர். அதீத புத்திசாலியாகவும், சாஸ்திரங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் இருப்பார். "அந்த" விஷயங்களில் ஆதீத ஆர்வம் உடையவராக இருப்பவர். அதே நேரத்தில் அதற்குத் தேவையான் சக்தி (vitality) குறைபாடு களும் உடையவர்.
ராகு: கல்மனது உடையவர். நட்பிற்கு லாயக்கில்லாதவர். மற்றவர்களால் எப்பொதுமே தவறாகக் காட்சியளிப்பவர். சமூக நடப்பிற்கு ஒத்துவராதவர். இதயநோய் உண்டாகலாம் குழந்தைகளைப் பறிகொடுத்துத் துயரங்களை அனுபவிக்கவும் நேரலாம். மொத்ததில் வேறு நல்ல அமைப்பு ஜாதகத்தில் இல்லை என்றால் இந்த ராகுவின் அமர்வு ஆளைப் படுத்தி எடுத்துவிடும்!

ஐந்தாம் அதிபதி 10ஆம் வீட்டில்
10ல் இருந்தால்: If favourably disposed: ராஜயோகம்.ஏராளமான சொத்துக்கள் (Landed properties) சேரும். அரச மரியாதை கிடைக்கும். அவருடைய குடும்ப உறவுகளில் அவருக்குத்தான் முதல் மரியாதை கிடைக்கும். If not favourably disposed: மேலே கூறியவற்றிற்கு எதிர்மறையான பலன்கள்.

11ல் இருந்தால்: எடுக்கும் காரியம் எல்லாவற்றிலும் வெற்றியும், நன்மையும் கிடைக்கும். செல்வந்தராகி விடுவார். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார். அதிகமான குழந்தைகள் இருக்கும்!

12ல் இருந்தால்: எதிலும் பற்றின்மை உண்டாகும், வேதாந்தியாகிவிடுவார். பல இடங்களிலும் அலைந்து திரிபவர். பிடிப்பு இல்லாதவர்
1ல் இருந்தால்: மிகவும் நல்லது. அதோடு நல்ல சேர்க்கையும், பார்வையும் பெற்றிருந்தால் தலைமைப் பதவி தேடிவரும். நிறைய வேலை ஆட்கள் இருப்பார்கள். அமைச்சராகக் கூட ஆகலாம், நீதிபதியாகவும் ஆகலாம். (அது பத்தாம் இடத்துடனும் சம்பந்தப்பட்ட தாகையால், நான் ஆணிபிடுங்கும் கம்பெனியில் டீம் லீடராக இருக்கிறேன். எனக்கு எப்படி நீதிபதி பதவி தேடி வரும் என்று கேட்க வேண்டாம். அந்த டீம் லீடர் பதவி கூட தலைமைப் பதவிதானே!) அதே நேரத்தில் 5th lord ஒன்றில் அமர்ந்தும், தீய கிரகங்களின் பார்வை, அல்லது சேர்க்கை பெற்றிருந்தால் மேலே கூறியவற்றிற்கு எதிரான பலன்களே நடைபெறும் சராசரி சேர்க்கை என்றால் மிக்சட் ரிசல்ட்!
2ல் இருந்தால்: If favourably disposed as said in the earlier paragraph: அழகான மனனவியும், அன்பான குழந்தைகளும் கிடைப்பார்கள்.படித்தவராக இருப்பார். அரச மரியாதை கிடைக்கும். If not favourably disposed: தரித்திரம் தாண்டவமாடும், தன் குடும்பத்தை வழி நடத்தவே சிரமப் படுவார். மற்றவர்களின் எரிச்சலுக்கும், அவமரியாதைகளுக்கும் ஆளாக நேரிடும்.


3ல் இருந்தால்: If favourably disposed: நல்ல குழந்தைகளும், நல்ல சகோதரன்,நல்ல சகோதரிகள் கிடைப்பார்கள். இங்கே நல்ல என்ற வார்த்தையில் எல்லாம் அடக்கம்! If not favourably disposed: Loss of chidren, misunderstanding with brothers and sisters, troubles in work or in business.

4ல் இருந்தால்: If favourably disposed: நல்ல, நீண்ட நாட்கள் உயிர் வாழும் தாய் கிடைப்பார். அரசுக்கு (வருமானவரி) ஆலோசகராக இருப்பவர். அல்லது அது சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர். If not favourably disposed: பெண் குழந்தைகள் மட்டும் உடையவராக இருப்பார்.
 5ல் இருந்தால்: If favourably disposed: அதிகமாக ஆண் குழந்தைகளை உடையவர். அவருடைய செயல்களில் தொழிலில் மேன்மை அடைபவராக இருப்பார்.பல சாஸ்திரங்களில் ஈடுபாடு உடையவர்.எல்லோரிடமும் நட்பாக இருப்பவர். கணக்கில் கெட்டிக்காரர். If not favourably disposed: எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் அவதியுறுவார். குழந்தைகள் இறக்கும் அபாயம் உண்டு. வார்த்தைகள் தவறுபவர். சலன மனம் உடையவர்.

6ல் இருந்தால்: பெற்ற பிள்ளைகளுடனேயே விரோதம் உண்டாகும். குழந்தை பாக்கியம் குறைவு. தத்துப் பிள்ளை எடுத்து வளர்க்க வேண்டியவர்.
 
7ல் இருந்தால்: If favourably disposed: நல்ல குழந்தைகளை உடையவர்.அதிகமான குழந்தைகளை உடையவர். அவர்களால் பொன்னும், பொருளும் , செல்வமும் பெறக்கூடியவர். செழிப்பான வாழ்க்கை அமையும். குருபக்தி மிக்கவர்.வசீகரத்தோற்றமுடையவர். If not favourably disposed: குழந்தைகளைப் பறிகொடுக்க நேரிடும். பெயரும், புகழும் பெற்ருத்திகழும் குழந்தைகளைக்கூட பறி கொடுக்க நேரிடும்
 8ல் இருந்தால்: மூதாதையர் சொத்துக்கள் கிடைக்காது.அப்படியே கிடைத்தாலும் அவற்ரைக் கடனுக்காக இழக்க நேரிடும். Lungs Problem உண்டாகும். மகிழ்ச்சி இல்லாதவர் Unhappy man but not poor!
9ல் இருந்தால்: If favourably disposed: கோவில், குளம் என்று திருப்பணிகள் செயக்கூடியவர். சொற்பொழிவாளர், பெரிய கவிஞர் அல்லது எழுத்தாளர், பேராசான். If not favourably disposed: அதிர்ஷ்டமில்லாதவர். முயற்சிகள் எல்லாம் தட்டிக்கொண்டு போய்விடும். நடக்காது போய்விடும்
 

Keine Kommentare:

Kommentar veröffentlichen