Vedic Astrology

Samstag, 4. Oktober 2014

Superlife Germany

https://www.facebook.com/groups/746988416355657/?ref=share










Eingestellt von Param um 20:57 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

Superlife Health

https://www.facebook.com/groups/746988416355657/?ref=share


  • Düsseldorf 40215, Bilker Allee 180
    Neueröffnung
    Tel.: 0211 91323899
    Email : d@dsl24shop.com
    http://sindu.dsl24shop.de
  • jetzt 100,- € Wechsler-Bonus
    Alle, die Jetzt zu 1&1 DSL wechseln,
    erhalten zusätzlich 100,- €
    Wechsler-Bonus
  • LG
    iPhone
    HTC
    Samsung
    Sony





  • Über DSL24SHOP.DE
  • Tel .: 0211 91 323 899







  • DSL & Festnetz
    • Aktionsangebote
  • Handys & Tarife
    • Tablets & LTE
  • Energie
    • Finanzen
    • Reisen
    • Versicherung
      • Kfz-Versicherungstarife
  • Shopping



































Letzte Beiträge

  • GALAXY S5 – Introduction
  • Samsung GALAXY Note 3
  • GALAXY S5 : Official Hands-on
  • Angriffe auf AVM FRITZ!Boxen
  • Telekom Deal S4 und Tab 3 10.1
  • Samsung Cash-Back
  • 1und1 50.000 Prämie
  • 1und1







Partner Links

  • DSL24SHOP.COM
  • Unity24shop.com
  • Voda24shop.com
  • 1u1shop.com
  • DSL24SHOP Düsseldorf







Partner Shops

  • Düsseldorf
  • Wuppertal

bald verfügbar

android itunes







  • Datenschutz
  • Franchise
  • Impressum

DSL24SHOP.DE © 2014 



 

DSL24SHOP.DE Duesseldorf








  • DSL & Festnetz

  • Handys & Tarife

  • Energie



  • Shopping









  • Düsseldorf 40215, Bilker Allee 180
    Neueröffnung
    Tel.: 0211 91323899
    Email : d@dsl24shop.com
    http://sindu.dsl24shop.de
  • jetzt 100,- € Wechsler-Bonus
    Alle, die Jetzt zu 1&1 DSL wechseln,
    erhalten zusätzlich 100,- €
    Wechsler-Bonus
  • LG
    iPhone
    HTC
    Samsung
    Sony








DSL – Internet und Telefon Jetzt richtig viel sparen !
  • Angebot! 1und1

    Special 16 MB

    29.99 € 19.99 €
    auswählen
  • Angebot! Telekom Comfort IP

    Telekom 16 MB

    34.94 € 29.95 €
    auswählen
  • Angebot! UNITY

    Unitymeida 100 MB

    25.00 € 19.99 €
    auswählen
  • Angebot! EasyBox 904 xDSL

    Vodafone 16 MB

    29.99 € 19.99 €
    auswählen

Mobilfunk Smartphones und vieles mehr
  • 000000264464

    1&1 Only Sim

    auswählen
  • Samsung Galaxy S5 O2

    Samsung Galaxy S5 bei O2

    auswählen














  • Geschäftskunden
  • Privatkunden
  • Über DSL24SHOP.DE
  • Tel .: 0211 91 323 899







  • DSL & Festnetz
    • Aktionsangebote
  • Handys & Tarife
    • Tablets & LTE
  • Energie
    • Finanzen
    • Reisen
    • Versicherung
      • Kfz-Versicherungstarife
  • Shopping





















Newsletter















Letzte Beiträge

  • GALAXY S5 – Introduction
  • Samsung GALAXY Note 3
  • GALAXY S5 : Official Hands-on
  • Angriffe auf AVM FRITZ!Boxen
  • Telekom Deal S4 und Tab 3 10.1
  • Samsung Cash-Back
  • 1und1 50.000 Prämie
  • 1und1







Partner Links

  • DSL24SHOP.COM
  • Unity24shop.com
  • Voda24shop.com
  • 1u1shop.com
  • DSL24SHOP Düsseldorf







Partner Shops

  • Düsseldorf
  • Wuppertal

bald verfügbar

android itunes







  • Datenschutz
  • Franchise
  • Impressum

DSL24SHOP.DE © 2014
Back to Top




Back to Top 1&1 Bilker Allee. 180, 40215 Düsseldorf - Bilk
Eingestellt von Param um 19:59 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

Donnerstag, 19. Juni 2014

Ascendantlord is Sun

கூரப்பா கதிருக்கு கணேசன் சக்தி கொற்றவனே அம்புலிக்கு ருத்திரன் மாரி ஆரப்பா வெகுபேர்க்கு அமுதளிப்பன் அப்பனே அன்னசத் திரமுங்கட்டி பாரப்பா பகைவர்களும் கண்ணுற்றாலும் பலன்குறைந்துபோகாது விதியும் தீர்க்கம் கூரப்பா போகருட கடாட்சத்தாலே கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே. இலக்கினாதிபதி கதிரோனாகிய சூரியனாகில் கணேசருக்கும். சக்திக்கும் சந்திரனாகிய ருத்திரன் கெளமாரி ஆகியோருக்கும் கோயில் திருப்பணி செய்வதுடன் வெகுபேர்க்கு அன்னமளிப்பதுடன் அன்ன சத்திரமும் கட்டி ஆதரிப்பான். இச்சாதகனின் 4,10க்குடையோர் கூடிய ஸ்தானத்தை பகைக்கிரகங்கள் பார்வையிட்ட போதும் இவனுக்குப் பலன்கள் குறையா.தீர்க்க ஆயுளே பெறுவான். இதனையும் எனது சற்குருவான போகமா முனிவரின் அருளாணைப்படி புலிப்பாணி கூறினேன்.
Eingestellt von Param um 08:44 1 Kommentar:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

Moon in 1-6-8

அரைந்திட்டே னின்ன மொன்று அன்பாய்க்கேளு அம்புலியும் ஆறெட்டு லெக்கினத்தில் குரைந்திட்டேன் கொடியோர்கள் கூடிநோக்க கூற்றுவனார் தந்திடுவர் சிசுவைப்பற்றி திரந்திட்டேன் திங்களொரு மூன்றுக்குள்ளே திடமான அரிட்டமடா பத்துநாளில் பரைந்திட்டேன் பாலனுக்கு விதியோ அற்பம் பண்பாக புலிப்பாணி உரைத்தேன்பாரே. போகமா முனிவருடைய கருத்தினை அன்பினால் கூறுகிறேன். அதனையும் நீ ஆராய்ச்சி பூர்வமாகக் கேட்பாயாக! இலக்கினத்திலும், ஆறிலும், எட்டிலும் சந்திரன் நிற்க அச்சந்திரனைக் கொடியவர்கள் கண்ணுற்றுப்பார்த்தால் கூற்றுவன் அச்சிசுவினைப்பற்றி மூன்று மாதத்திற்குள் குறிப்பாகப் பத்து நாள் அதிக அரிஷ்டமுண்டாகும், அச்சாதகனுக்கு விதி வெகு அற்பமென்று போகரது கருணா கடாட்சம் பெற்ற புலிப்பாணி கூறினேன். இந்தக் கருத்தினையும் நீ உணர்ந்து நோக்குக.
Eingestellt von Param um 08:37 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

Moon in trikonal to Sun

பாரப்பா யின்ன மொன்று பகரக்கேளு பகலவனும் கலை மதியும் கோணமேற சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும் செல்வனுக்கே வேட்டலுண்டு கிரகமுண்டு ஆரப்பா அமடுபய மில்லையில்லை அர்த்தராத் திரிதனிலே சப்தம்கேட்பன் கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில் கூற்றுவனார் வருங்குறியை குறிப்பாய் சொல்லே இன்னுமொரு முக்கியமான செய்தியினையும் நான் கூறுகிறேன். இதனையும் நீ நன்குணர்ந்து ஆராய்ச்சி அறிவுடன் கொள்வாயாக! பிரசித்தி பெற்ற சூரிய பகவானுக்கு திரிகோண ஸ்தானத்தில் (1,5,9 ஆகிய இடங்களில்) அமிர்த கலையுள்ள சந்திரன் பலமுற்ற அச்சாதகனுக்கு பலவிதத்தாலும் செல்வங்கள் சேருமென்றாலும், அரிஷ்டமும் உண்டு. எனினும் காக்கும் கோள் உண்டாதலின் அதனால் குறையொன்றும் இல்லவே இல்லை. நடு நிசியில் சப்தங்களைக் கேட்பவானாக இருப்பான். அச்சாதகனுக்கு 78-ஆம் வயதில் கூற்றுவனார் வருவார் என்பதனை ஏனைய கிரகங்களையும் எண்ணி உன் குறிப்பைச் சொல்வாயாக.
Eingestellt von Param um 07:54 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

Mars in 2nd House

பாடினே னின்னமொரு புதுமைகேளு பலமான செவ்வாயும் துதியில் நிற்க கூடினேன் கிரகத்தில் வழக்கும் போரும் குமரியவள் கணவனையும் கருதிப்பாராள் தேடினேன் தையலுமோ மாண்டாளானால் தனம்விரயம் சஞ்சலமும் அழுதுமாய்வன் ஆடினேன் ஆடவர்கள் அழுதகூலி அவல்கடலை அவர்மடியில் போடுவாரே. நான் கூறுகின்ற இன்னொரு புதுமையும், நீ கேட்பாயாக! ஸ்தான பலமிக்க செவ்வாய் இரண்டாம் இடத்தில் நிற்க அச்சாதகனின் மனையில் அனுதினமும் போர் நிகழும். காரணம் மனைவி அவனைக் கருதிப் பாராதவளாக இருப்பாள். ஆயினும் அவள் மடிந்தாளேயானால் தனம் விரயமாதலும், மனோ வியாகூலமும், அடைந்து அழுகையினால் அச்சாதகன் மாய்வான் என்றே கூறுவேன். ஆடவர்கள் அழுத கூலிக்காக அவலையும் கடலையையும் அவர்தம் மடியில் போடுவார் என்று போகர் அருளாணைப்படி புலிப்பாணி கூறினேன்.
Eingestellt von Param um 07:31 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

Kethu in 4th House

கேளப்பா இன்னமொரு புதுமைகேளு கெடுதிசெய்யும் செம்பாம்பு நாலில்நிற்க சீளப்பா ஜெனித்தமனை சுத்தபாழாம் சென்மனுக்கு கிரகமுண்டு விதியும்கூறு கூளப்பா குளிகனுமோ சேர்ந்து நிற்க குடியிருக்கக் குச்சில்லை கறவையில்லை ஆளப்பா அன்னைக்கு தோஷம் தோஷம் அத்திடலில் அரவுக்கு சாந்திசெய்யே அப்பனே இன்னுமொருபுதுமையினையும் கூறுகிறேன். அதனையும் நன்கு உணர்ந்து கேட்பாயாக! தீமையையே செய்யும் செம்பாம்பு எனக் கூறப்படும் கேது பகவான் நான்காம் இடத்தில் நிற்க அந்த சென்மன் உதித்த மனைபாழாகிப் போகும். அவனுக்கு தீக்கோள் தோஷமுண்டு. அவனது விதியையும் கிரகபலம் அறிந்து கூறுக. அவனுடன் மாந்தியும் கூடிநிற்பின் குடியிருக்க வீடோ கன்று காலிகளோ அவனுக்கில்லை. அவனது அன்னைக்கும் தோஷம் உண்டாம் என்று கூறுவதுடன் நாக தோஷப் பரிகாரம் செய்வது சிறப்பாமென்று போகமா முனிவரது பேரருளினால் புலிப்பாணி கூறினேன்.
Eingestellt von Param um 07:27 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

தன கர்மாதிபதி 2nd und 10th lord


செய்யப்பா யின்னமொரு சேதிகேளு செயலாக நிதிகரும னிருவர்கூடி கையப்பா கண்ணுற்று நோக்கினாலும் கனமுள்ளோ ரிருவருமே மாறினாலும் அய்யப்பா அகம்பொருளும் நிலமுஞ்செம்பொன் அப்பனே கிட்டுமடா ஜென்மனுக்கு உய்யப்பா போகருடா கடாசத்தாலே உத்தமனே புலிப்பாணி உரைத்தோம்னமே சீர்த்தி மிகுந்தவனே, நீ இன்னுமொரு சேதியினையும் கேட்பாயக! இரண்டிற்குடையவனும் பத்துக்குடையவனும் கூடி இருப்பினும் அல்லது ஒருவரை ஒருவர் கண்ணுற்று நோக்கினாலும் அல்லது இவன் வீட்டில் அவனாக மாறி நிற்பினும் அச்சாதகனுக்கு அகமும், பொருளும், நிலமும், செம்பொன்னும் வெகுவாகக் கிடைக்கும். போகருடைய கடாட்சத்தால் உய்க என்றே அவருடைய மாணாக்கனாகிய புலிப்பாணி உரைத்தேன். 

Eingestellt von Param um 07:25 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

6th lord & 3rd lord in one

அரைந்திட்டே னின்னமொரு சேதிகேளு அப்பனே ஆறோனும் மூன்றோனின்மேல் திரந்திட்டேன் தேசத்துக்குக் கள்ளர்நாட்டை தீயாலேகொளுத்திடுவன் சினமுள்ளோன் உரைத்திட்டேன் உள்நாட்டு கள்ளர்கண்டால் உள்ளபடி ஆக்கினையை விதிப்பவன் கான் பரைந்திட்டேன் படையாட்சி ஆள்கள்மெத்த பன்பாக புலிப்பானி அரைந்திட்டேனே இன்னுமொரு சேதினையும் நான் கூறுகிறேன் கேட்பாயாக! ஆறுக்குடையோனும் மூன்றுக்குடையோனும் கூடினால் அவன் மிகப் ¦ப்ரும் வீரனாக விளங்கினால் தீய கள்ளர்தம் தேசத்தைத் தீயாலே கொளுத்துகின்ற அளவுக்கு சினமுடைய வனாக இருப்பான். இன்னும் மறைமுக எதிரிகள் உண்டானால். அவர்களுக்கு முறைப்படி ஆக்கினைகள் விதிப்பான். இச்சென்மன் மிகப்பெரும் வீரனென்றும் குடி, படை கொண்டு செலுத்தத் தக்கவன் என்றும் இவனுக்கு நிறைந்த ஆள்பலம் உண்டென்றும் போகரது அருளால் புலிப்பாணி கூறினேன். `
Eingestellt von Param um 07:03 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

Sonntag, 4. Mai 2014

12th lord 2th lord in 7 house

வீரப்பா யின்னமொரு வினையைக்கேளு விரையாதி குடும்பியுமோ ரேழில் நிற்க சீரப்பா ஜென்மனும் வேடதாரி சிவசிவா பாடகனாம் செய்யுளுள்ளோன் கூரப்பா குமரியினால் லாபமுண்டு கொற்றவனே செப்படி வித்தைகளும் செய்வன் ஆரப்பா அரவத்தைப் பிடித்துவந்து ஆட்டிவைப்பன் அனைவோரும் பார்க்கத்தனே வீரமிக்க மறவனே! இன்னுமொரு சேதியினையும் நீ விநயமுடன் கேட்பாயாக! 12-க்குடையவனும் 2க்குடையவனும் 7ஆம் இடத்தில் நிற்க, இச்சென்மன் சீருடையவன் என்றும், பாடகன் என்றும், செய்யுள் இயற்ற வல்லவன் என்றும், பெண்களால் லாபமடைபவன் என்றும், அரசனைப்போல் அலங்காரப் பிரியனென்றும் செப்படி வித்தையில் தேர்ந்தவன் என்றும். எல்லாரும் காணும் படியாக அரவுதனை ஆட்டிவைத்துக் காணச் செய்பவன் என்பதையும் போகர் அருளாலே புலிப்பாணி கூறினேன்.
Eingestellt von Param um 13:13 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

From Moon 4th house & Venus

பாரப்பா யின்னமொரு புதுமைகேளு பால்மதிக்கு நாலோனும் சுங்கன் கூடில் கூரப்பா யெத்தடத்தில் கூடிட்டாலும், கொற்றவனே ஜென்மனுமோ மந்திரவாதி வீரப்பா வராகிதுர்க்கை தேவி அம்மன் விதமான பூசைதனை மண்ணோர் போற்ற சீரப்பா போகருட கடாட்சத்தாலே செப்பினேன் புலிப்பாணி செயலைத்தானே. நன்றாகக் கூர்மையாக இக்கருத்தையும் மனத்துள் கொள்க! இது புதுமையானதொன்றேயாகும். சந்திரன் நின்ற இடத்திற்கு நாலாம் இடத்திற்குரியவனும் சுக்கிரனும் கூடினால் அதாவது எவ்விடத்தில் கூடினாலும் அச்சென்மனை நீ மந்திரவாதி என்றே கூறுதல் வேண்டும். அவன் இப்பூவுலகில் உள்ளவர்கள் போற்றுமாறு வராகி,துர்கை, தேவி, அம்மன் ஆகியோருக்கு விதம் விதமாக பல நல்பூசைகளைச் செய்வன் என்றும் போக முனிவரது பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.
Eingestellt von Param um 13:09 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

Moon, 12th-5th House in one place

செப்புவாய் சந்திரனும் ஈராறோனும் சிவசிவா பஞ்சமத்தோன் மூவர்சேர்ந்து அப்புவாய் ஆகாசங் கோபுரத்தில் அப்பனே கம்பத்தைக் கட்டித்தானும் ஒப்புவாய் உலகத்தோர் மதிமயங்க ஓகோகோ ஆகாச கரணம்போட்டு தப்புவாய் தரணி தனில் கீழேவந்து தார்வேந்தர் மனமகிழ பணிவன்பாரே. புகழ் பெற்ற சந்திரனும் இலக்கினத்திற்குப் ப்ன்னிரண்டுக் குடையவனும் சிவ பரம்பொருளின் பேரருட் கருணையினால் ஐந்தாமிடத்தோனும் ஆகிய இவர்கள் மூவரும் சேர்ந்து நிற்க. இச்சாதகன்,நீர் மீதும், ஆகாச மீதும், கோபுரத்தின் மீதும் கம்பங்களை நாட்டி அதன் மீதிலும் உலகோர் ஒப்பும்படியாக, அவர்களது மதியானது மயக்கமுறும்படியாக ஆகாசத்தில் கரணம் இட்டு வேடிக்கை காட்டி பூமியின் கீழ்வந்து மன்னர் முதலான மற்றையோரின் பரிசில்களைப் பெற்று மகிழ்வான் என்று போகமாமுனிவரது பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.
Eingestellt von Param um 13:01 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

ஆறுக்குடையனும் இலக்கினத்ததிபனும்

பகருவாய் ஆறோனும் லெக்கனாதி பன்னிரெண்டெட்டாறில் தீயரோடே இகருவாய் தேகமது ஜென்மனுக்கு இளைத்து விடும்ரோகங்கள் கிட்டும்கிட்டும் புகழுகின்ற அரவொடு ரெண்டோன் கூடி பூங்குழலே ரெண்டதனி லமர்ந்து நிற்க நிகழுகின்ற நீணிலத்தில் கல்வியாலே நாலுவித பிரசங்க வித்வானாமே இன்னுமொன்றுரைப்பேன் கேட்பாயாக ஆறுக்குடையனும் இலக்கினத்ததிபனும் 12,8,6 ஆகிய இல்லங்களில் தீயோரோடு இருக்கப் பிறந்த ஜென்மனுக்கு தேகத்தில் இளைப்பு உண்டாகும். அநேக வியாதிகள் வந்து வாய்க்கும். எல்லாரும் புகழும் அரவுடன் இரண்டுக்குடையவன் கூடி இரண்டாம் இடத்திலேயே நிற்க இந்நிலவுலகில் அச்சாதகன் தான் பெற்ற கல்வியின் நிமித்தமாக மிகச் சிறந்த வித்துவானாகவும் பிரசங்கியாகவும் மிளிர்வான் என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
Eingestellt von Param um 12:54 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

Sun Mercury Mars

தானென்ற இரவிக்கு முன்னேபுந்தி தனித்திருக்கப் புனிதனடா தரித்திரத்தோஷம் தானென்ற யிரவிக்குப் பின்னேபுந்தி தரணிதனில் பேர் விளங்கும் தனமுள்ளோன் தானென்ற யிரவிக்குப் பின்னேசேயும் தங்கிடவே புத்திரர்கள் மெத்தவுண்டாம் தானென்ற குருவோடு நீலன்மேவ தரணிதனில் செவிடனடா முடவன்பாரே. தன்னிகரில்லாத ரவிக்கு புதன் முன்னே தனித்திருக்க அவன் புனிதனேயாவான். ஆனால் தரித்திர யோகம் கொண்டவனே. ஆனால் ரவிக்குப் பின்னால் புதன் நிற்பின் அச்சாதகன் பெயர் பூமியில் விளக்கமுறக் காணும். அவன் தனவானேயாவான். அதேபோல் ரவிக்குப் பின்னே செவ்வாய் நிற்க அச்சாதகனுக்குப் புத்திரர்கள் மெத்தவும் உண்டு. மற்றும், குருவோடு நீலனும் அவ்வாறு மேவ அச்சாதகன் செவிடனாகவும் முடவனாகவும் இருப்பான் என்று போகரது அருளாணையாலே புலிப்பாணி கூறினேன்.
Eingestellt von Param um 12:47 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

சூரியனுக்குப் பின்னால் சனிபகவான் நின்றால் Saturn before Sun

அரைந்திட்டே னின்னமொன்று செப்பக்கேளு
அனலனுக்குப் பின்னாலே அலரிமந்தன்
பரிரைந்திட்டேன் பண்டுபொருள் அகமிங்கிட்டும்
பார்தனிலேபர தார விசையநப்பா குரைத்திட்டேன் குமரனுக்கு எட்டுபத்தில் குலவையிட்டு வருவனடா சண்டன்தானும் சிறந்திட்டேன் ஜென்மனுக்கு யோவஞ்செப்பு சிறப்பாகப் புலிப்பாணி ஆசிச்சேனே.


 இன்னொரு விவரத்தையும் உனக்குக் கூறுகிறேன். அதை மனங்கொண்டு கேட்பாயாக! அனலன் என்று சொல்லப்படும் சூரியனுக்குப் பின்னால் தாமரையை மலர்த்தும் அவனது குமாரனான மந்தன் என அழைக்கப்படும் சனிபகவான் நின்றால் அச்சாதகனுக்கு பூர்வீக சொத்தும் நல்ல மனையும் கிடைக்கும். அவன் இந்நிலவுகில் பரதார இச்சை கொண்டவனாக இருப்பான் என்றும் அவனது எண்பதாவது வயதில் எமதூதனாகிய சண்டன் வருவானென்றும் ஆயினும் அவன் யோகவானேயென்றும் போகர் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
Eingestellt von Param um 12:38 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

ascendent in scorpion





தெரிவித்தேன் தேளினில்லம் சென்மந்தோன்ற
செழுமதியும் கோணத்தில் சேரநன்று
அறிவித்தேன் அகம்பொருளும் அடிமைசெம்பொன்
அப்பனே கிடைக்குமடா அவனிவாழ்வன்
அறிவித்தேன் கேந்திரமும் கூடாதப்பா
மறையவனே கொடும்பலனை குறித்துச்சொல்லும்
தெரிவித்தேன் போகருட கடாக்ஷத்தாலே
தேர்ந்து நீபுலிப்பாணி நூலைப்பாரே



 தேள்சின்னம் கொண்டவிருச்சிக இலக்கினத்தில் பிறந்தோனுக்கு
 நன்மை செய்யத்தக்க சந்திர பகவான் திரிகோணத்தில் அமைவது
 நற்பலன்களை வாரி வழங்கும். இதனை உனக்கு நன்கு அறிவுறுத்துகிறேன்.
 நல்ல வீடு அமைதலும் தனலாபம் பல்கிப் பெருகுதலும்,
 அடிமைகள் வாய்த்தலும் சீரிய பொன்னாபரண சேர்க்கையும்
 அவனுக்குக் கிடைத்து இந்த பூமியில் வெகு புகழுடன் வாழ்வான்.
 ஆனால் 1,4,7,10 ஆகிய கேந்திரஸ்தானத்தில்
 அவன் வீற்றிருப்பின் இதற்கு நேர்மாறான பலன்களை நீ கூறவும்.
 இதையும் என் குருவான போகரது கடாட்சத்தாலேயே நான் குறித்துச் சொல்கிறேன்.
 நன்றாக ஆய்ந்தறிந்து என் நூலின் சிறப்பினை உணர்ந்து கொள்க. [எ-று] 

Eingestellt von Param um 11:20 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen

தீய கோள்கள் 4th house und 4th Lord in kendra

குறித்திட்டே னின்ன மொன்று கூறக்கேளு
குற்றமுள்ளோர் நான்கதனி லமைந்தவாறும் 
அரித்திட்டே னத்தலத்தோன் கேந்திரிக்க
அமடுவந்து தீருமடா அகமுமுள்ளோன்
சிரித்திட்டேன் ஜென்மனுக்கு வாகனங்களுண்டு
சிறப்பாக மேதினியில் நலமாய் வாழ்வன்
பரித்திட்டேன் பெற்றவட்கு ரோகஞ்சொன்னேன்
பரமகுரு பதியமர யோகந்தானே நான் இன்னுமொன்றையும் குறித்துச் சொல்கிறேன் நன்கு கேட்பாயாக!





தீய கோள்கள் நான்கில் அமைந்த முறையும் அந்த நான்காம் தலத்திற்கு உரியவன் கேந்திரத்திலிருப்பின் அதாவது 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்க துன்பம் வந்து தீரும் என்பது சுருதி முடிவாகும். ஆயினும் நல்லமனை அவனுக்கு வாய்க்கும்; வாகன வசதியுடையவன். இந்நிலவுலகில் மேலான பெருமையுடன் வாழ்வான். ஆயினும் பெற்றோருக்கு வியாதியும் உண்டு என்பதை போகமா முனிவரின் பேரருளால் நான் கூறினேன் என்று புலிப்பாணி குறிப்பிடுவதோடு இலக்கினாதிபதி குருவுடன் சேர நன்றாம் என்று கூறுகிறார்.
Eingestellt von Param um 10:45 Keine Kommentare:
Diesen Post per E-Mail versendenBlogThis!Auf X teilenIn Facebook freigebenAuf Pinterest teilen
Neuere Posts Ältere Posts Startseite
Abonnieren Posts (Atom)

Visitors

Flag Counter

Blog-Archiv

  • ►  2022 (1)
    • ►  Juli (1)
  • ►  2017 (1)
    • ►  Mai (1)
  • ►  2016 (1)
    • ►  Dezember (1)
  • ►  2015 (2)
    • ►  Dezember (2)
  • ▼  2014 (17)
    • ▼  Oktober (2)
      • Superlife Germany
      • Superlife Health
    • ►  Juni (7)
      • Ascendantlord is Sun
      • Moon in 1-6-8
      • Moon in trikonal to Sun
      • Mars in 2nd House
      • Kethu in 4th House
      • தன கர்மாதிபதி 2nd und 10th lord
      • 6th lord & 3rd lord in one
    • ►  Mai (8)
      • 12th lord 2th lord in 7 house
      • From Moon 4th house & Venus
      • Moon, 12th-5th House in one place
      • ஆறுக்குடையனும் இலக்கினத்ததிபனும்
      • Sun Mercury Mars
      • சூரியனுக்குப் பின்னால் சனிபகவான் நின்றால் Saturn b...
      • ascendent in scorpion
      • தீய கோள்கள் 4th house und 4th Lord in kendra
  • ►  2013 (3)
    • ►  Juli (1)
    • ►  Juni (1)
    • ►  Januar (1)
  • ►  2012 (126)
    • ►  Dezember (6)
    • ►  November (8)
    • ►  Oktober (24)
    • ►  September (72)
    • ►  August (15)
    • ►  Juli (1)

Über mich

Param
Mein Profil vollständig anzeigen
Design "Fantastisch". Powered by Blogger.