Montag, 10. September 2012

கன்னி



குறித்திட்டேன் கன்னியிலே உதித்தபேர்க்கு
குற்றம்வந்து நேருமடா குருவினாலே
பரித்திட்டேன் பண்டுபொருள் நிலமும்சேதம்
பகருகின்ற குருபதியும் கோணமேற
சிரித்திட்டேன் சென்மனுக்கு வேட்டலுண்டு
செந்திருமால் தேவியுமே பதியில் வாழும்
குறித்ததொரு மனை தனிலே தெய்வமுண்டு
குற்றமில்லை புலிப்பாணி கூறினேனே                

கன்னியா லக்கினத்தில் உதித்த பேர்க்குக் குருவினால் வெகு துன்பம் வாய்த்திடுதல் உண்மையேயாகும். எவ்வாறெனில் பூர்வீக சொத்துகளும், நிலமும் சேதமாகும் என்பது உண்மையே, ஆனால் குருவும் மதியும் திரிகோண ஸ்தானத்தில் அமைவதில் பலனுண்டா? என நினைப்பின் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் இத்தகைய ஜென்மனுக்கு வேட்டல் உண்டு என்பதும் உண்மையேயாமன்றோ? எனினும் திருமகள் கணவனான திருமாலும் அவனது திருவான தேவியும் அவன் மனையில் வாழ்வர். அவர் தம் மனையில் தெய்வம் வாழும். எனவே இதனால் குற்றமில்லை என்பதை போகரது மாணாக்கனான புலிப்பாணியாகிய நான் இதைக் குறித்துச் சொன்னேன்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen