Dienstag, 11. September 2012

சக்கரவர்த்தியாகும் யோகம்

கொள்ளப்பா கோள் ஒன்று சரமாய் நான்கில் கொற்றவனே யேகசக்கிர வர்த்தியாவன் அள்ளப்பா அனைபரி சேனைகூட்டம் அணியணியா யிருக்குமடா அநேகமாக உள்ளப்பா உத்தமர்கள் அருளும்பெற்று உலகிலுள்ள அரசரிடம் பகுதிவாங்கி இல்லப்பா இவ்வுலகில் சேல்கண்ணாளை இதமாகச் சுகித்திருப்பன் அனேகம்பேரே. இதனையும் நீ நன்கு உன் மனத்துள் கொள்வாயாக! இலக்கினத்திற்கு நான்காம் இடத்தில் சரத்தில் ஒரு கோள் நிற்க அச்சாதகன் சக்கரவர்த்தியாகும் யோகம் உள்ளவன். அனேகமான யானை, குதிரை ஆகிய சேனைக் கூட்டம் மிகவும் அணி பெற்று விளங்கும். இன்னுமொன்றையும் உணர்க. இச்சாதகன் உத்தமர்களின் அருள் பெற்றவனாக இலங்குவான். உலகில் உள்ள பல அரசர்களிடம் பகுதி (கிஸ்தி) வாங்கி இன்புடைய மாதரோடு சுக ஜீவனம் செய்வான்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen