Sonntag, 9. September 2012

Pulippani-சூரியபகவான்







கூறேநீ ஈராறும் ரெண்டுரெண்டு கொற்றவனே பாக்கியமும் யேழோடஞ்சில் ஆரேனீ ஆதித்த னிருந்தானானால் அப்பனே அங்கத்தில் காந்தலுண்டு சீரேனீ சொற்பனமும் சிரங்குகண்ணோய் சிவசிவா சிந்தித்த தெல்லாமாகும் கூறேனீ போகருட கடாக்ஷத்தாலே கொலையீனார் பகையது வருகுஞ்சொல்லே -விளக்க உரை- சூரியபகவான் 12,4 பாக்கியமும் ,7,5,6 ஆகிய இடங்களில் இருப்பாரேயானால் [இலக்கினத்திலிருந்தது] அச்சாதகனுக்கு உடலில் காந்தல் உண்டென்றும் சொற்ப அளவிற்கே சீர் பெறுவான் என்றும், சிவனருளால் சிரங்கு, கண்ணோய் முதலியன ஏற்படும் என்றும் நின்று இதந்தரும் என் குருநாதரான போகரது கருணா கடாக்ஷத்தாலே இம் மகனுக்கு, வஞ்சித்துக் கொலை செய்யும் ஈனர்களின் பகையும் வரும் என்று கிரகநிலையை நன்கு ஆய்ந்தறிந்து பலன் கூறுவாயாக. note:

Keine Kommentare:

Kommentar veröffentlichen