Sonntag, 9. September 2012

Pulippani.-இராகு கேது


பாரப்பா ராகுடனே கேதுவுக்கும் பாங்கான வீடதுவே கும்பமாட்சி வீரப்பா விருச்சிகமும் கடகம் உச்சம் வீறுடைய ரிஷபமது நீச்சம்சிம்மம் காரப்பா பகையாகும் மற்றேழ்நட்பாம் காண்பதுவும் மூன்றுபதி னொன்றாம் சொல்வார் ஆரப்பா போகருட கடாட்சத்தாலே அப்பனே புலிப்பாணி அறிவித்தனே. நன்றாக ஆராய்ந்து பார்ப்போமானால் இராகு பகவானுக்கும், கேது பகவானுக்கும் நன்மையளிக்கும் ஆட்சி வீடு கும்பம் என்றும் முறையே இராகுவிற்கு உச்ச வீடு விருச்சிகம் என்றும் கேதுவுக்கு கர்க்கடகம் உச்ச வீடென்றும் ரிஷபம் நீச்ச வீடென்றும் சிம்மம் பகையென்றும் ஏனைய மற்றைய மேஷம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ஏழு இராசிகளும் நட்பென்றே போகருடைய கருணையால் புலிப்பாணி அறிவித்தேன். [எ-று]

Keine Kommentare:

Kommentar veröffentlichen