Sonntag, 9. September 2012

Pulippani- சனி







பாரப்பா இன்னமொன்று பகரக்கேளு பானுமைந்தன் பன்னொன்றி லமைந்தவாறும் சீரப்பா சிறந்தகுரு சப்தமத்தில் சீறிவரும் கரும்பாம்பு நாலிலேற ஆரப்பா ஆரல்யிரு மூன்றதாகும் அப்பனே அருக்கனுந்தான் மூன்றில்போக வீரப்பா விலகுமடா தோஷம் தோஷம் விதியுண்டு சென்மனுக்கு விளம்பக்கேளே -விளக்க உரை- இன்னுமொரு கருத்தையும் உனக்கு விளக்கமாகக் கூறுகிறேன் நன்கு கேட்பாயாக! கதிர் மைந்தனாம் சனி 11இல் அமைந்து சிறப்புமிக்க குருபகவான் சப்தம (7ல்) ஸ்தானத்திலும் இராகு 4 ஆம் இடத்திலும், செவ்வாய் மூன்றிலும், சூரிய மூன்றில் போய் நிற்க (சனி பகவானால்) தோடம் உண்டெனினும் சென்மனுக்கு ஆயுள் உண்டென்று கூறுவதுடன் மேலும் நான் சொல்லும் கருத்துகளையும் கேட்பாயாக!

Keine Kommentare:

Kommentar veröffentlichen