Sonntag, 9. September 2012

Pulippani Sg - Mer



பாரப்பா வில்லதனில் உதித்தபேர்க்கு
பகருவேன் புந்தியுமே பகையுமாவர்
சீரப்பா சென்னல் விளை பூமிதோப்பும்
சிவசிவா செம்பொன்னும் சேதமாகும்
நீரப்பா நெடுமாலும் கோணமேற
நீணிலத்தில் பேர்விளங்கும் நிதியுமுள்ளோன்
ஆரப்பா போகருட கடாக்ஷத்தாலே
அப்பனே புலிப்பாணி பாடினேனே

இராசி மண்டலந்தன்னில் வில்லைத் தன் இலச்சினையாக்கொண்ட தனுசு ராசியைஇலக்கினமாகக் கொண்டு ஜனித்த ஜன்மனுக்கு கணக்கன் என்றும் புந்தி என்றும் புகலப்படும் புதபகவான் பகையானவர். அவரால்,

செம்பொன்விளையும் பூமியும், தோப்பு துரவுகளும் பூர்வ புண்யவசத்தால் பெற்ற அருந்திரவியங்களும் சேதமாகும். ஆனால் அதே புதன் 1,5,9 ஆகிய் திரிகோணஸ்தானத்தில் வீற்றிருப்பின் சிறந்த பூமியில் தன் பெயர் விளங்கக் கூடிய பெருநிதி படைத்தோனாக அச்சாதகன் விளங்குவான் என்பதையும் குருவருளால் குருவாணை கொண்டு  குவலயத்திற்கு புலிப்பாணி உரைத்தேன்.                                [-று

]

Keine Kommentare:

Kommentar veröffentlichen