Sonntag, 9. September 2012

Pulippani- கும்பம் Aquarius







பாடினேன் இன்னமொரு புதுமைகேளு பாங்கான கும்பத்தி லுதித்த சேய்க்கு ஆடினேன் அசுரர்குரு கோணமேற அப்பனே உப்பரிகை மேடையுண்டு தேடினேன் திரவியமும் சென்னல் பூமி திடமாகச் சேருமடா செல்வமுள்ளோன். கூடினேன் கேந்திரமும் நட்புமே கொற்றவனே துர்ப் பலனைக் கூறுவாயே நான் என்கவியில் பாடுகின்ற இன்னொரு புதுமையையும் மனங்கொண்டு கேட்பாயாக! மிக அழகிய கும்ப லக்கினத்தில் உதித்த மகனுக்கு அசுரர் தம் குருவான சுக்கிராச்சாரியார் திரிகோண ஸ்தானங்களில் அமர்ந்தால் உப்பரிகையும் சிறந்த மேடையும், இணையற்ற திரவியமும் செந்நெல் விளையும் நறுவிய பூமியமைதலும் நிச்சியமாக நேரும். மிகு தனவானாக சிறந்து வாழ்வான். ஆயினும் கேந்திர [1,4,7,10] நட்பு ஸ்தானங்களில் சுக்கிரபகவான் இருந்தால் மேற்குறித்த பலனுக்கு நேர்மாறான பலன்களைக் குறித்து கிரக நிலவரம் அறிந்து கூறுவாயாக! [எ-று]

Keine Kommentare:

Kommentar veröffentlichen