Sonntag, 9. September 2012

Pulippani.சுக்கிரன்


கேளப்பா சுக்கிரனுக் கெருதுகோலும் கெணிதமுட னாட்சியது உச்சம்மீனம் வாளப்பா கோதையவள் நீச்சமாவாள் வகையில்லா சிங்கமுடன் விருச்சிகந்தாள் ஆளப்பா பகையதுவே யாகும் ஆறும் அளவில்லா நட்பென்றே யறைந்தவாறு மாளப்பா பகையதுவே யாகும் ஆறும் மார்க்கமுடன் புலிப்பாணி யறிவித்தேனே. சுக்கிர பகவானுக்கு ரிஷபமும், துலாமும் எண்ணிக் கூறி விடில் ஆட்சி வீடென்றும் மீனம் உச்ச வீடென்றும், கன்னி ராசி நீச்ச வீடென்றும் சிம்மமும் விருச்சிகமும் பகை வீடென்றும் ஏனைய இராசிகளானமேஷம், மிதுனம், கடகம், தனுசு, மகரம், கும்பம் நட்பு வீடென்றும் இதுவே நன்மார்க்கம்[வழி] என்றும் புலிப்பாணி கூறினேன். [எ-று]


Keine Kommentare:

Kommentar veröffentlichen