Sonntag, 9. September 2012

Pulippani-சனி


தேனென்ற சனி தனக்கு மகரம்கும்பம் தெகிட்டாத ஆட்சியது உச்சம்கோலாம் மானென்ற மேஷமது நீசம்மற்ற மற்கடக சிம்மமொடு விருச்சிகந்தான் ஊனென்ற வீண்பகையாம் மற்றோரைந்தும் உள்ளபடி நட்பாகு முடவனுக்கே கோனென்ற குருவருளாம் கடாட்சத்தாலே கொற்றவனே புலிப்பாணி கூறினேனே. தேனைப் போன்ற இனிமையான பலன்களை வாரி வழங்கும் சனி பகவானுக்கு மகரமும் கும்பமும் ஆட்சி வீடாகும். துலாம்ராசி உச்ச வீடாகும். அவ்விராசிக்கு ஏழாவதான மேஷராசி நீச்ச வீடாகும். மற்றும் கர்க்கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய இராசிகள் பகை வீடென்றும் ஏனைய மீனம், ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு ஆகிய ஐந்தும் நட்பு வீடுகளாம் என்றும் குருவாகிய போகரது கருணையாலே புலிப்பாணி கூறினேன். [எ-று]

Keine Kommentare:

Kommentar veröffentlichen