Sonntag, 9. September 2012

Pulippani- Mars செவ்வாய்





சொல்லப்பாஆறெட்டு பன்னிரண்டும் சுகசப்த கேந்திரமும் பாக்கியம் ரெண்டில் அல்லப்பா அத்தலத்தில் ஆரல்நிற்க அப்பனே அகம் பொருளும் நிலமும் நஷ்டம் குள்ளப்பா குடும்பமது சிதறிப்போகும் கொற்றவனே குருவுக்கு தோஷமுண்டாம் வல்லப்பா போகருட கடாக்ஷத்தாலே வளமாகப் புலிப்பாணி வசனித்தேனே. -------------------------------------------------------- விளக்க உரை---------------------------------------------------------------------------------------------------- இன்னுமொன்றும் சொல்லுகிறேன் கேட்பாயாக. இச் செவ்வாய், சேய், பவுமன் என்றும் உரைக்கப்படுபவன். இவன் 6,8,12,3,7,10,9-இல் நிற்க நிலமும் பொருளும் மனையும் சேதமாகும்; குடும்பமானது சிதறிப்போகும் இதனைச் செவ்வாய் [குரு] தோஷம் என்றும் கூறுவார்கள் வல்லவராகிய என் சற்குரு போக மாமுனிவரின் கருணையாலே வன்மையுடன் புலிப்பாணி முனிவராகிய நான் கூறினேன்.


Keine Kommentare:

Kommentar veröffentlichen