Sonntag, 9. September 2012

Pulippani-கொடிமாலை






கூறப்பா குருவோடு வெய்யோன் பாம்பு கொற்றவனே குருமனையில் கூடி நிற்க சீரப்பா சென்மனுக்கு தோஷமில்லை செப்புகிறென் கொடிமாலை விழுகாதப்பா ஆரப்பா அங்கத்தின் மச்சமுண்டு அப்பனே அரவோடு அனலன்சேர கூறப்பா கொடிமாலை மச்சமுண்டு கொற்றவனே குழவிக்குக் கூறுவாயே. -விளக்க உரை- சாதகனுக்குப் பலனுரைக்கும் சோதிடனே! தேவகுருவான பிரகஸ்பதியின் ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ஆகிய மனைகளில் அவரோடு அரவும் சூரியனும் சேர்ந்து நிற்க அச்சாதகனுக்கு எந்த ஒரு தோடமும் இல்லை. கொடிமாலை கழுத்தில் சூடிக் (குழந்தை) பிறப்பதில்லை. ஆனால் உடலில் மச்சமுண்டு. ஆனால் குருவின்றி அரவோடு அனல எனப்படும் சூரியன் சேர்ந்தால் கொடி மாலை மச்சம் உண்டாம் என்று கூறுவாயாக.





Keine Kommentare:

Kommentar veröffentlichen